Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

ஏப்ரல் 08, 2022 12:48

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.

 கொரோனாவின் முதல் அலை பரவியபோது கேரளா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் அங்கு பாதிப்பு குறைவாக இருந்தது. அதற்கு பின் வந்த 2-வது அலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.

உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை விட கூடுதலாக இருந்தது. இதனால் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

முதல் 2 அலைகளுக்கு பிறகு இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. கடந்த 1-ந்தேதி முதல் மத்திய அரசு கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொண்டது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் கடந்த 1-ந்தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கி கொண்டாலும் கேரளாவில் மட்டும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.

இப்போது அங்கும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 531 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 291 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிப்பு வெகுவாக குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரம் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற அடிப்படை செயல்கள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்